internet

img

 எப் 8 மாநாட்டினை நிறுத்தியது பேஸ்புக்

பேஸ்புக் நிறுவனம் இந்த வருடம் நடக்கவிருந்த எப் 8 மாநாட்டினை நிறுத்துவதாக அறிவித்துள்ளது 
உலகம் முழுவதும் கொரோனோ வைரஸ் பாதிப்பு அச்சம் நிலவும் சூழலில் பேஸ்புக் நிறுவனம் பிரமாண்டமாக நடத்த திட்டமிட்டிருந்த எப் 8  மாநாட்டினை நிறுத்துவதாக அறிவித்துள்ளது 
உலகில் சுமார் 60 நாடுகளில் கொரோனா வைரஸ் பரவி உள்ளது. இதுவரை கொரோனாவில் பாதிக்கப்பட்ட 3 ஆயிரத்துக்கும் அதிகமானனோர் உயிரிழந்துள்ளனர். 90 ஆயிரத்திற்கும் அதிகமானோர் நோய் பாதிப்பால் பாதிக்கப்பட்டுள்ளனர் இந்நிலையில் பேஸ்புக் நிறுவனம் எப்8 (F8) தனது மாநாட்டினை நிறுத்துவதாக அறிவித்துள்ளது கடந்த மாதம் நடக்கவிருந்த மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ் நிகழ்ச்சியும் கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக இறுதிகட்டத்தில் நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது